பிளஸ்1 ஆங்கிலம் 2ம் தாள் தேர்வு 737 பேர் ஆப்சென்ட்


கோவை கல்வி மாவட்டத்தில், 28 ஆயிரத்து 500 பள்ளி மாணவர்களும், 174 தனித்தேர்வர்களும், பிளஸ்1 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு எழுதினர். நேற்றைய தேர்வில், 537 பள்ளி மாணவர்கள் மற்றும் 22 தனித்தேர்வில் பங்கேற்கவில்லை.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 6 ஆயிரத்து 345 பள்ளி மாணவர்கள் எழுதினர்; 117 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதோடு, 23 தனித்தேர்வர்களில் ஒருவர் மட்டும் தேர்வெழுத வரவில்லை. மொத்தம், 90 மதிப்பெண்களுக்கு நடந்த இத்தேர்வு, காலை 10:00 மணி முதல், மதியம் 12:45 மணி வரை நடந்தது. சுயமாக எழுதும் பகுதிகளில் இருந்தே அதிக வினாக்கள் இடம்பெற்றதாக மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் ஆங்கில அறிவை சோதிக்கும் வகையில், வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post