பிளஸ் 2 தேர்வில் காப்பி 16 மாணவர்கள் சிக்கினர்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்ததாக 16 மாணவர்கள் செவ்வாய்க்கிழமையன்று பிடிபட்டுள்ளனர்.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி: பிளஸ் 2 பொதுத் தேர்வில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாக மதுரையில் 3 மாணவர்கள் மற்றும் 1 தனித் தேர்வர் , திண்டுக்கல்லில் 1 தனித் தேர்வர், புதுக்கோட்டையில் 1 மாணவர், திருச்சியில் 6 மாணவர்கள், வேலூரில் 4 தனித் தேர்வர்கள் என மொத்தம் 16 பேர் கண்டறியப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post