பிளஸ் 2 மாணவி திருமணம் நிறுத்தம்!

புதுக்கோட்டை அருகே, பிளஸ் 2 மாணவியின் திருமணத்தை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமணஞ்சேரியில் உள்ள சுகந்த பரிமனேஸ்வரர் கோவிலில் நேற்று காலை, 11:00 மணிக்கு, 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக, &'சைல்டு லைன்&' அமைப்புக்கு தகவல் வந்தது. &'சைல்டு லைன்&' மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார், அங்கு சென்று, விசாரணை நடத்தி, திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மீட்கப்பட்ட சிறுமி, பிளஸ் 2 தேர்வு எழுதி வருகிறார். தொடர்ந்து, சிறுமி மற்றும் அவரது பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி, &'18 வயது பூர்த்தியாகும் வரை திருமணம் செய்யக் கூடாது&' எனவும், சிறுமியை தொடர்ந்து படிக்கவும், தேர்வு எழுதவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், &'சிறுமியை புதுக்கோட்டை குழந்தைகள் நல குழுமத்தில் ஆஜர்படுத்த வேண்டும்&' என, பெற்றோரிடம் எழுதி வாங்கினர்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post