செவ்வாய் கிரகத்தில் 20 கி.மீ., பரப்பளவுள்ள ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானிகள் அளித்துள்ள அறிக்கை: செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் முதன்முறையாக கிடைத்துள்ளது. கடந்த 3.6 மில்லியன் ஆண்டு பழமைவாய்ந்த, 20 கி.மீ., பரப்பளவுள்ள பனிபடர்ந்த ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாயில் 1.5 கி.மீ., ஆழத்தில் பனி சூழ்ந்த திரவ படலம் காணப்படுகிறது. இதில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியம் திரவ நிலையில் உள்ளன. இவ்வாறு அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
0 تعليقات
Thanks for your comment