TNPSC - இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா







போடி- சில்லமரத்துப்பட்டி கலாபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியும் தேனி IAS அகாடமியும் இணைந்து கிராமப்புற மாணவர்களுக்கு  இலவச TNPSC பயிற்சி வகுப்புகள் சில்லமரத்துப்பட்டி கலாபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரி தலைவர் கலாபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 போடி காவல்துறை துணை கண்காளிப்பாளர்  திரு. ஈஸ்வரன்  அவர்கள் இலவச TNPSC பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து போட்டித்தேர்வுக்கு திட்டமிடல், தன்னிம்பிக்கை , 6 முதல் 12 ம் வகுப்பு பாடநூல்களை படிததால் வெற்றி பெறலாம் என அறிவுறுத்தி  இலவச பயிற்சி புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

போட்டித்தேர்வுக்கு தயார் செய்யும் முறை  குறித்தும்,  
 தேனி IAS அகாடமி இயக்குநர் சின்னராஜ்,அவர்கள்  விழிப்புணர்வூட்டி சனி,ஞுாயிறு நடைபெறும்  இலவச வகுப்புகளுக்கு வரும் பயிற்சியாளர்களுக்கு இலவசமாக பாடநூல்கள்(study materials) வழங்கப்படும் இதை கிராமப்புற மாணவர்கள் கலந்து கொண்டு  பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். 

நடைபெற்ற இலவச பயிற்சி வகுப்பு துவக்கவிழாவில் கல்லூரி மாணவ மாணவர்கள் மற்றும்பேராசியர்கள், படித்த கிராமப்புற  இளைஞர்கள் கலந்து கொண்டனர்,இப்பயிற்சி தொடர்ந்து ஒவ்வொரு சனி,ஞாயிறு நாட்களில் நடைபெரும்,படித்த கிராமப்புற  இளைஞர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறும் நோக்கில் துவங்கப்பட்டுள்ளது.. இலவச பயிற்சி வகுப்பு தொடர்புக்கு 9543064238 எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
                                                                        

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post