பிப்., 1 முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு





தமிழக மாணவர்களுக்கு பிளஸ் 2 பொது தேர்வு மார்ச் 1ல் துவங்குகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல் கண்காணிப்பாளர் நியமனம் மாணவர்களின் விபரங்கள் சரிபார்த்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. செய்முறை தேர்வை  பிப்  6 முதல் நடத்த, தேர்வு துறை திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும்  தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி சுற்றறிக்கை அனுப்பினார். அதில் பிப் 1 முதல் 12ம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்  என அவர் கூறியுள்ளார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post