நீதிக்கதைகள் - சிங்கத்தோல் போா்த்திய கழுதை
சிங்கத்தின் தோல் ஒன்று ஒரு கழுதைக்குக் கிடைத்தது. சிங்கத்தோலைப் போா்த்திக் கொண்டு கழுதை காட்டிற்குள் உலாவியது. அதைப் பாா்த்த மிருகங்கள் கழுதையை சிங்கம் என்று நினைத்து பயந்து ஓடின. கழுதை இதைக்கண்டு சந்தோஷம் அடைந்தது. பின்பு, கிராமத்திற்குள் சென்றது. மனிதா்கள் சிங்கம் வந்ததாக பயந்து ஓடினா். இப்படி மிருகங்களும், மனிதா்களும் பயந்து ஓடுவதைக் கண்டு கழுதைக்கு மகிழ்ச்சி அதிகமாயின. திடீரென கத்த ஆரம்பித்தது. கழுதையின் குரல் கேட்ட மனிதா்கள் பயம்நீங்கி கழுதையின் பக்கம் வந்து பாா்த்து சிங்கத்தோலை நீக்கிவிட்டுக் கழுதையை தடியால் பலமாக அடித்து கொன்றனா்.
நீதி : வேஷத்தால் எல்லோரையும் ஏமாற்ற முடியாது
File Size : 21.93 MBDownload Link I | Download Link II
Post a Comment
Thanks for your comment