கோவை கல்வி மாவட்டத்தில், 28 ஆயிரத்து 500 பள்ளி மாணவர்களும், 174 தனித்தேர்வர்களும், பிளஸ்1 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு எழுதினர். நேற்றைய தேர்வில், 537 பள்ளி மாணவர்கள் மற்றும் 22 தனித்தேர்வில் பங்கேற்கவில்லை.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 6 ஆயிரத்து 345 பள்ளி மாணவர்கள் எழுதினர்; 117 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதோடு, 23 தனித்தேர்வர்களில் ஒருவர் மட்டும் தேர்வெழுத வரவில்லை. மொத்தம், 90 மதிப்பெண்களுக்கு நடந்த இத்தேர்வு, காலை 10:00 மணி முதல், மதியம் 12:45 மணி வரை நடந்தது. சுயமாக எழுதும் பகுதிகளில் இருந்தே அதிக வினாக்கள் இடம்பெற்றதாக மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் ஆங்கில அறிவை சோதிக்கும் வகையில், வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 Comments
Thanks for your comment