15.66 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, லேப்டாப்




தமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கும்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும்மாணவர்களுக்கும், தமிழக அரசின் சார்பில், இலவச லேப்டாப்வழங்கப்படுகிறது.

இதற்கான பணிகளை, பள்ளி கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. கடந்த கல்விஆண்டில், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, இன்னும் லேப்டாப்வழங்கப்படவில்லை.இந்நிலையில், 2017-18ல் படித்த மாணவர்களுக்குமட்டுமின்றி, 

நடப்பு கல்வி ஆண்டில்,பிளஸ் 1, பிளஸ் 2 படிப்போர் மற்றும் பாலிடெக்னிக்மாணவர்களுக்கும், இந்த ஆண்டிலேயே, லேப்டாப் வழங்க, பள்ளி கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
இதற்காக, இந்திய தர நிர்ணய ஆணைய அங்கீகாரம் பெற்றநிறுவனங்களிடம், 15.66 லட்சம் லேப்டாப்கள் வாங்கப்பட உள்ளன. அதற்கானகொள்முதல் நடவடிக்கைகள், &'எல்காட்&' என்ற, தமிழக அரசின்எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் வாயிலாகதுவக்கப்பட்டுள்ளன.
நவீன வசதிவெப் கேமரா, வைபை, ப்ளூடூத் வசதி, தமிழ் மொழிக்கானயூனிகோட் கீ போர்ட், 500 ஜி.பி., தகவல்களை சேகரிக்கும் வசதியுள்ள ஹார்ட்டிஸ்க், டி.டி.ஆர்., - 4 வகை ரேம் போன்ற தொழில் நுட்பங்களுடன், லேப்டாப்கள்வாங்கப்படுகின்றன. லேப்டாப்களில், மாணவர்களின் உயர்கல்விக்கானஅம்சங்கள், தமிழக அரசின் கல்வி திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களைபதிவேற்ற உத்தர விடப்பட்டுள்ளது.
அதேபோல, &'விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், லினக்ஸ்&' என்ற,இரண்டாவது ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இணைக்கப்படுகிறது. இதனால்,இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற உயர்கல்வியிலும், இந்த லேப்டாப்களைபயன்படுத்த முடியும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

யார் யாருக்கு கிடைக்கும்?

கடந்த ஆண்டில், பிளஸ் 2 படித்த, 4.72 லட்சம் மாணவர்கள்; 12 ஆயிரத்து, 663 ஐ.டி.ஐ., மாணவர்கள்; இந்த ஆண்டு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும், 10.66 லட்சம் பேர்; பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படிக்கும், 13 ஆயிரத்து, 679 பேருக்கு, லேப்டாப் வழங்க, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post