காய்ச்சல் அறிகுறி இருக்கும் மாணவர்கள் குறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும்:மாவட்டக் கல்வி அலுவலர்




*பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல்அறிகுறி இருந்தால் அதுகுறித்த விவரத்தை உடனே வட்டார மற்றும் நகராட்சி சுகாதார அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர் குணசேகரன்  அறிவுறுத்தினார்.

*அரக்கோணம் நகராட்சி போலாட்சியம்மன் நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த அரக்கோணம் வட்டார அரசு மற்றும் அரசு நிதியுதவி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம்  நடைபெற்றது.

*கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் குணசேகரன் பேசியதாவது.

*டெங்கு காய்ச்சல் வராதபடி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு தற்போது எடுத்து வருகிறது.

*பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் மற்றும் பள்ளிக் கட்டடம், மாடிப்பகுதிகள் மிகவும் தூய்மையாக வைக்கப்பட வேண்டும். தேவையில்லாத பொருள்களை வெளியில் வைக்க வேண்டாம்.

*அவை மழையில் நனையும் போது அதில் கொசு உருவாகலாம். இதில், தலைமை ஆசிரியர்கள் அதிக கவனம்கொள்ள வேண்டும்.

*3 நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்தும், காய்ச்சல் அறிகுறி தென்படும் மாணவ, மாணவிகள் குறித்தும் தகவல்கள் வட்டார மற்றும் நகராட்சி சுகாதார அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

*மாணவர்களின் குடும்பத்தினருக்கு காய்ச்சல் இருப்பது மாணவர்கள் வாயிலாக தெரியவந்தாலும் சுகாதார அலுவலருக்கு தெரியப்படுத்தலாம்.

*முக்கியமாக மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அன்றாடம் தெரிவித்து அவர்களின் மனதில் பதியவைக்க வேண்டியதும் முக்கியம் என்றார் அவர்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post