10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்காக செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் துணைத் தேர்வு ரத்து!




வரும் 2019-20 கல்வி ஆண்டு முதல் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு, அதைத்தொடர்ந்து ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டுமே நடத்த வேண்டும். 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்காக செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் துணைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நடைமுறையின்படி மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வில் பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்களாகவும் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாதவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. வரும் மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வையும், அதைத் தொடர்ந்து நடக்கும் சிறப்பு உடனடித் தேர்வையும் மாணவர்கள் எழுத விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post