நாளை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம்; சத்துணவு மையங்கள் காலவரையின்றி மூடப்படும் - சத்துணவு ஊழியர் சங்கம்



சத்துணவு ஊழியர் சங்கம் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சங்கத் தலைவர் சுந்தரம்மாள் அறிவித்துள்ளார்.

எனவே திங்கள்கிழமை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம்; சத்துணவு மையங்கள் காலவரையின்றி மூடப்படும் என்று சத்துணவு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post