TRB தேர்வு அறிவிப்பு, அடுத்த வாரம் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில், ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படும்



'டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்பு, அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.அடுத்த மாதம் முதல் வாரத்தில், ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படும்,'' என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்பு, அடுத்த வாரம் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில், ஆன்லைனில் விண்ணப்பம் வழங்கப்படும்.தற்போது நடந்து வரும், பகுதி நேர ஆசிரியர் பணி நியமனத்தில், போலி சான்றிதழ் புகார் எதுவுமில்லை. அவ்வாறு புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post